
காரைக்குடி: காரைக்குடி சார்-பதிவாளர் அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய இடத்தை பத்திரப்பதிவு செய்ய வலியுறுத்தி திமுகவைச் சேர்ந்த நகராட்சித் துணைத் தலைவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
காரைக்குடி நகராட்சி குறிச்சிபுரவு பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண்களுக்குரிய இடம் இலுப்பகுடி தேவஸ்தானத்துக்குரியது என கூறி, பத்திரப்பதிவை நிறுத்தி வைக்க இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்