
சென்னை: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை சத்திய மூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறும்போது, "கர்நாடக ஆட்சி மாற்றம், மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கான தொடக்கம்.இந்த தீர்ப்பு 2024 மக்களவைத் தேர்தல், இதர மாநில தேர்தல்களிலும் எதிரொலிக்கும்" என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்