
மதுரை: கடந்த மூன்று ஆண்டில் மதுரை மாநகராட்சியில் மூன்று மாநகராட்சி ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது உள்ள மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக உள்ள பிரவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு 2021ம் ஆண்டு ஜூனில் மதுரை மாநகராட்சி ஆணையாளராக இருந்த விசாகன் திண்டுக்கல் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இவர் மாநகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்களை மேற்கொண்டு கறாராக இருந்து வந்தார். 100 வார்டுகளில் நீண்ட காலமாக ஒரே பணியிடத்தில் செல்வாக்குடன் இருந்த மாநகராட்சி அதிகாரிகளை இடமாற்றம் செய்து நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்