
மதுரை: ‘கருத்துரிமை, பேச்சுரிமையை மறுக்கக்கூடாது. நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கலாம்’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்ட பாஜக நிர்வாகி எஸ்.கார்த்திக்கேயன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ஜூலை 1-ல் பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி கரூர் மாநகராட்சி ஆணையரிடம் 8.6.2023-ல் மனு அளித்தோம். எங்கள் மனுவை நிராகரித்து மாநகராட்சி ஆணையர் 9.6.2023-ல் உத்தரவிட்டார். அதை ரத்து செய்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்