
சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் யாரும் தமிழர்கள் இல்லை என்று, ஒடிசாவில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களை அடையாளம் காணவும், அவர்களை தமிழகம் அழைத்து வரவும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் முகாமிட்டிருந்தனர். முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது அவர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு, அங்கு நடந்து வரும் மீட்பு, நிவாரண பணிகள் குறித்துகேட்டறிந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்