
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைகண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரபிக்கடலில் நிலவிய ‘பிப்பர்ஜாய்’ புயல் நேற்று தீவிர புயலாக வலுப்பெற்று, கோவாவில் இருந்து மேற்கு, தென்மேற்கே 880 கி.மீ.தொலைவிலும், மும்பையில் இருந்து தென்மேற்கே 990கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்துமிக தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். அடுத்து வரும் நாட்களில் முதலில் வடக்கு திசையிலும், பின்னர் வடக்கு, வடமேற்கு திசையிலும் இது நகரக்கூடும்.
தமிழக பகுதியின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜூன் 8, 9-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும், 10, 11-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்