
சென்னை: ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், நேற்று தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். ரயில் விபத்தில் இதுவரை தமிழர்கள் யாரும் உயிரிழக்கவோ, படுகாயம் அடையவோ இல்லை என்று ஒடிசாவில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, சென்ட்ரலில் உள்ள பயணிகள் உதவி மையம், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையம் ஆகிய இடங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், தொலைபேசியில் ஒடிசா தலைமைச் செயலரை தொடர்பு கொண்டு, மீட்பு பணி குறித்து கேட்டறிந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்