
சென்னை: தமிழகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டணம் தொடரும். மேலும், இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளும் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஆட்சியின் திறனற்ற மேலாண்மையால், தமிழ்நாடு மின் வாரியத்தின் நிதிநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் உத்தரவுபடி, மின் எரிபொருள் மற்றும் மின்சாரம் கொள்முதல் விலை உயர்வை ஈடுசெய்ய, நுகர்வோரிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்வதும் கட்டாயமாக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்