
மதுரை: சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த மதுரை-நத்தம் புதிய நான்கு வழிச் சாலையில் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்ட புதிய டோல்கேட் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு இன்று செயல்படாட்டிற்கு வருவதாக இருந்த நிலையில் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டது.
மதுரை-நத்தம் நான்கு வழிச் சாலையையும், மதுரையில் இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் பாலத்தையும் சமீபத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நான்கு வழிச்சாலை, நத்தம் வழியாக துவரங்குறிச்சி வரை 63 கி.மீ., செல்கிறது. மதுரையில் ஊமச்சிக்குளத்திற்கும் சத்திரப்பட்டிக்கும் வரை இடையில் ஒரு கி.மீ., தொலைவு வரை மட்டுமே இந்த சாலை பழைய நிலையிலே உள்ளது. அப்பகுதியில் மட்டும் முழுமையாக புதிய சாலை போடவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்