
மதுரை: சமூக வலைதளங்களில் முதல்வரை விமர்சிக்கும் பாஜகவினரை உடனடியாக கைது செய்யும் போலீஸார், பிரதமரை விமர்சிப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் மாநகர் மாவட்ட பாஜக சார்பில் மக்கள் தொடர்பு பேரியக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்களால் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா அனைத்து துறையிலும் முன்னேறியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்