
தருமபுரி: தருமபுரி கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் தஞ்சமடைந்த ராட்சத உடும்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் 7 வட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு வட்டத்திலும் கணிசமான அளவு நிலப்பரப்பு வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, காட்டெருமை போன்ற பெரியவகை விலங்குகள் தொடங்கி, சிறுத்தை, நரி, கரடி, செந்நாய், மான், கடமான், காட்டுப்பன்றி, குரங்கு, முயல், மலைப்பாம்பு, உடும்பு, எறும்புத் திண்ணி, பச்சோந்தி, மயில் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் வசிக்கின்றன. இவைகளில் சில உயிரினங்கள் சில நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி அருகிலுள்ள விளைநிலங்கள் அல்லது கிராமங்களில் நுழைவதுண்டு. இவ்வாறு வெளியேறும் விலங்கினங்கள் வனத்துறையினரின் நடவடிக்கையால் மீண்டும் வனப்பகுதிக்கே பிடித்துச் செல்லப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்