
ஆம்பூர்: ஆம்பூரில் ரூ.130 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மற்றும் உயர் மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகளை மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் நேற்று (20-ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை ரூ.130 கோடி செலவில் 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை - பெங்களூரு இடையில் நகர பகுதிக்குள் தேசிய நெடுஞ்சாலை செல்லும் ஒரே நகரம் ஆம்பூர் நகரமாகும். இதனால் எப்போதும் ஆம்பூர் நகர பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்