
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே எஸ்.அத்திகோம்பையில் நடந்த குதிரை, மாட்டுச்சந்தைக்கு வியாபாரிகள், விவசாயிகள் வராததால் களை இழந்து காணப்பட்டது. எனினும், சந்தையில் அதிகபட்சமாக காங்கேயம் காளை மாடு ரூ.1 லட்சத்துக்கும், நாட்டு குதிரை ரூ.50,000-க்கும் விற்பனையானது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே எஸ்.அத்திகோம்பையில் ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோயில் திருவிழா ஜூன் 20-ம் தேதி தொடங்கி ஜூன் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் குதிரை மற்றும் மாட்டுத்தாவணி நடைபெறுவது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்