
சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்குவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் கேரளாவில் பருவமழை தொடங்குவது தாமதமாகி வருகிறது. இதற்கு அரபிக்கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணம் என்றும், வரும் 8-ம் தேதி தென்மேற்குபருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்