
சென்னை: தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற டிஜிபி முகமது ஷகில் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கூடுதல் டிஜிபியாக இருந்து ஓய்வுபெற்ற பி.தாமரைக்கண்ணன் உள்ளிட்ட 4 பேர் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அந்தந்த துறைகளின் பொதுத்தகவல் அலுவலர்கள் பதிலளிக்காத பட்சத்தில், மேல்முறையீட்டுக்கான அமைப்பாக மாநில தகவல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.இந்த ஆணையத்தில் ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் 6 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தகவல் ஆணையராக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் மற்றும் தகவல் ஆணையர்கள் 4 பேரின் பதவிக்காலம் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழு, விண்ணப்பங்களை பெற்று தனது அறிக்கையை முதல்வரிடம் அளித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்