
வேலூர்: வேலூர் மாநகர மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புதிய பேருந்து நிலையம் ரூ.53 கோடியில் திறக்கப்பட்டு ஓராண்டாகிறது. வேலூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திறந்து வைத்ததுடன் பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனத்தால் செப்டம்பர் மாதம் தான் பேருந்துநிலையம் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இருப்பினும், பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்து ஓராண்டாகியும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்