
மதுரை: சென்னை மெட்ரோ முறைகேடு புகாரை சிபிஐ விசாரித்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறைக்கு செல்வது உறுதி. அதற்கு பயந்து தான் சிபிஐக்கு வழங்கப்பட்ட பொது அனுமதியை திரும்ப பெற்றுள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரையில் பாஜக மையக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பாஜகவினருக்கு முதல்வர் நேரடியாக மிரட்டல் விடுத்ததாக நான் பார்க்கிறேன். செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அமலாக்கத்துறை வழக்கை விசாரித்து கைது செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்