
தருமபுரி: கர்நாடகா மாநில அணைகளில் இருந்து காவிரியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று (ஜூலை 25) மாலை தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடைந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 19-ம் தேதி காலை அளவீட்டின்படி நீர்வரத்து விநாடிக்கு 1,200 கன அடி என்ற அளவில் இருந்தது. அதற்கு அடுத்த நாளான 20-ம் தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 1,000 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. அன்றிலிருந்து நேற்று (ஜூலை 25) மாலை வரை விநாடிக்கு 1,000 கன அடியாகவே நீர்வரத்து தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில், பெற்று மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 2,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. 6 மணியளவில் இது விநாடிக்கு 3,000 கன அடியாகவும், இரவு 9 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 5,000 கன அடியாகவும் உயர்ந்தது. தொடர்ந்தும் படிப்படியாக நீர்வரத்து அளவு அதிகரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்