
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ‘ரேட்டால்’ எலி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் இணை இயக்குநர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் விஜயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘ரேட்டால்’ என்ற, 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து தயாரிக்கப்பட்ட எலி மருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த அபாயகரமான மருந்தை விற்பனை செய்ய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்