
மதுரை: குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் பன்றி பண்ணைகளை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உயர் நீதிமன்ற கிளையில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தூத்துக்குடி உடன்குடியைச் சேர்ந்த காசிலிங்கம், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தூத்துக்குடி உடன்குடியில் குடியிருப்பு பகுதியில் சிலர் பன்றி பண்ணைகள் நடத்தி வருகின்றனர். மீன் கழிவுகள், கோழி கழிவுகள், அழுகிய தாவரங்கள் பன்றிகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது. இதனால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்