
மதுரை: முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று மதுரை அரசு அருங்காட்சியகம் சார்பில் நடுகல் கண்காட்சி தொடங்கியது. இதை பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, அரசு அருங்காட்சியகம் சார்பில், கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி, மதுரையில் அரசு அருங்காட்சியகம் சார்பில் நடுகற்கள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி வரும் 24-ம் தேதி வரை காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்