
ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘வரும் காலங்களில் பன்னீர்செல்வத்துடன் இணைந்தே செயல்படுவோம். பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும்’ என ஸ்ரீவில்லிபுத்தூரில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் நடைபெறும் அமமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.விதினகரன் மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக காரில் சென்றார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் டி.டி.வி தினகரன் சுவாமி தரிசனம் செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்