
மயிலாடுதுறை: பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை-மைசூர் விரைவு ரயில் நின்று செல்வதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ். அன்பழகன் தலைமை வகித்தார். மாநிலங்களவை எம்.பி எஸ். கல்யாணசுந்தரம், பாபநாசம் பேரூராட்சி தலைவர் க.பூங்குழலி முன்னிலை வகித்தனர். மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ரயிலை கொடியசைத்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், "இந்தியாவில் ரயில்வே துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இந்த துறை தொடர்பாகத் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்