
கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ்- காளியம்மாள் தம்பதியினரின் மகன் ராஜேஷ்குமார் (39). பாலிசிஸ்டிக் கிட்னி நோய் பாதிப்புக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று முன்தினம் (ஜூலை 20) உயிரிழந்தார். இந்நிலையில் ராஜேஷ்குமாரின் உயிரிழப்புக்கு அரசு மருத்துவமனையே காரணமே என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
மேலும், அரசு மருத்துவமனையில் மருந்துகளை வெளியில் வாங்குமாறு மருத்துவர்கள் கூறியதாகவும், லஞ்சம் கேட்பதாகவும், செவிலியர்கள் முறையாக நோயாளிகளை கவனித்துக் கொள்வதில்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்