
சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘இந்தியாவுக்காக பேசுகிறேன்’ என்ற தலைப்பில் பல மொழிகளில் குரல் பதிவை வெளியிடுகிறார்.
‘இண்டியா’ கூட்டணியின் சார்பில் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் 3- வது கூட்டத்தில் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்கின்றனர். ஏற்கெனவே, மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்தகட்டமாக நாடு முழுவதும் தனது குரலை ஒலிக்கச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்