
சென்னை: உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தபடி, காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அக்கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் குறுவை சாகுபடியும், சம்பா நெல் விதைப்பும், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை, குறிப்பாக கர்நாடகாவில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளன. மாதாந்திர அட்டவணைப்படி, பிலிகுண்டுலுவில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின்பங்கை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த உத்தரவை கர்நாடக அரசு முழுமையாகமதிக்கவில்லை. காவிரி ஆணைய வழிகாட்டுதலையும் கடைபிடிக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்