
அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள நரிப்பள்ளியில் நடந்த அரசுப்பள்ளி விழாவில் முன்னாள் ஆசிரியர்களுக்கு பொற்காசு மற்றும் பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் 10 கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் சகுந்தலா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிற்றரசு, பொருளாளர் முருகன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் வாசுகி சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தருமபுரி மாவட்டத்தின் கடைக்கோடியில் மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ளது இந்த நரிப்பள்ளி . மலைப்பகுதிகளையொட்டி அமைந்துள்ள கிராம பகுதியில் இருந்து படித்து சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் கிருஷ்ணகுமார்(47) இப்பள்ளியில் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு வரை படித்தார். தற்போது சென்னையில் பணியாற்றி வரும், இவர் தான் படித்த பள்ளியில் தற்போது பயிலும் கிராமப்புற மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் 10 நவீன கணினிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் அன்பளிப்பாக அளித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்