
மதுரை: விவாகரத்து உள்ளிட்ட குடும்ப நல வழக்குகளை சமரசமாகவோ அல்லது உரிய நிவாரணம் வழங்கியோ ஓராண்டுக்குள் முடிக்க, உரிய விதிமுறைகளை வகுக்க தலைமை நீதிபதியிடம் வலியுறுத்துவேன் என முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறினார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எம்எம்பிஏ (MMBA) வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மகாத்மா காந்தி அரங்கில் பாராட்டு விழா நேற்று நடந்தது. உயர் நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி எஸ்எஸ். சுந்தர் தலைமை வகித்தார். நீதிபதிகள் விஜயகுமார், ஸ்ரீமதி, கேகே. ராமகிருஷ்ணன் பங்கேற்றனர். நீதிபதி எஸ்எஸ்.சுந்தர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கிருஷ்ணவேணி, மீனாட்சி சுந்தரம், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம் குறித்து பாராட்டி பேசினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்