
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரங்களில் கடந்த 10 நாட்களில் பிடிப்பட்ட 8 மலைப்பாம்புகள், அதிக விஷத்தன்மை கொண்ட 13 பாம்புகள் வனத்துறையினர் மீட்டு, காப்புக்காடுகளில் விடுவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்து 400 சதுர கிலோமீட்டர் பரப்பில் காடுகள் அமைந்துள்ளன. இதில் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, அஞ்செட்டி, ஊடேதூர்கம், சிங்காரப்பேட்டை, தொகரப்பள்ளி, ஒசூர், ஜவளகிரி ஆகிய வனசரகங்கள் உள்ளன. இந்த வனச்சரங்களுக்குட்பட்ட வனபகுதிகளில் யானை, சிறுத்தைப்புலி, கடமான், புள்ளிமான், காட்டுபன்றி, மயில், உடும்பு, கீரிபிள்ளை மற்றும் ஏராளமான மலைபாம்புகள் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்