
மதுரை: மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்ட கிளை சார்பில், அரங்கக் கூட்டம் நடந்தது.
தலைவர் பேராசிரியர் அ. சீநிவாசன் தலைமை வகித்தார். ‘ஜனநாயகத்தின் குரல் வலையை, வழிமுறைகளிலேயே நெறிக்க, முயல்கிறதா மத்திய அரசு’ எனும் தலைப்பில் மேற்கு வங்க அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர் ஜி.பாலசந்திரன் பேசினார். புதிய குற்றவியல் சட்டத்திருத்தம் காவிமயமாகிறதா நீதி பரிபாலன முறை என்ற தலைப்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கருத்துரை வழங்கினார். முன்னாள் பேராசிரியர் முரளி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய செயலர் லயனஸ் அந்தோனிராஜ் நன்றி கூறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்