
சென்னை: தமிழகம் முழுவதும் 1.06 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை, அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம்ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்