
ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 17 மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
கடந்த செப் 12-ம் தேதி ராமேசுவரத்தில் இருந்து சென்ற அந்தோணி என்பவரின் விசைப்படகை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைப்பற்றி 8 மீனவர்களை கைது செய்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேர், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் என 17 மீனவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்