
சென்னை: வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட 18 பழங்குடியின பெண்களுக்கும் அரசு வேலையுடன் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனத் துறை, காவல் துறை, வருவாய் துறையை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையையும் நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் - பாப்பிரெட்டிபட்டி இடையே கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் உள்ள வாச்சாத்தி மலை கிராமத்தினர் சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த 1992 ஜூன் 20-ம் தேதி 155 வனத் துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய் துறையினர் கூட்டாக சோதனை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்