
சென்னை: தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீட்டில், 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேக்சிவிஷன் மருத்துவமனை நிறுவனம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கும் தமிழகம், தானியங்கி வாகனங்கள், ஜவுளி, காலணி மற்றும் தோல் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வான்வெளி மற்றும் பாதுகாப்பு என பல்வேறு வகையான தொழில்களை நிறுவ ஊக்கமளிப்பதன் மூலம், முதலீடுகள் மேற்கொள்வதற்கு உகந்த மாநிலமாக தொடர்ந்து விளங்கி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்