
சென்னை: எண்ணூர், வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட அனல் மின் நிலையங்களில், மின்சாதனப் பொருட்கள் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, அனல் மின் நிலையங்களுக்கு பெரிய கன்வேயர் பெல்ட்கள், கேபிள்கள் மற்றும் மின்சாதனப் பொருட்களை விநியோகிக்கும் 4 தனியார் நிறுவனங்களை கண்காணித்த வருமான வரித் துறை அதிகாரிகள், போலி ரசீது மூலம் அந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பதைக் கண்டறிந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்