
சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு தமிழக ஆளுநர், தெலங்கானா ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறுகட்சி தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னைகிண்டி ராஜ்பவனில் உள்ள பாரதியாரின் சிலையும், அருகே அவரது திருவுருவ படமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. அப்படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்