
மதுரை: ‘ஒரு நூலகம் பல சிறைக்கதவுகளை மூடும் ’ என, மதுரை மத்திய சிறையில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பேசினார்.
மதுரை மத்திய சிறையில் காந்தி ஜெயந்தியையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் சிறைத்துறை டிஐஜி பழனி தலைமை வகித்தார். சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர், நடிகருமான கு.ஞானசம்பந்தன் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார். மேலும், கைதிகள் தயாரிக்கும் அங்காடி மற்றும் கைதிகள் மூலம் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து கூண்டுக்குள் வானம் என்ற நூலகத் திட்டத்திற்கு தான் எழுதிய புத்தகங்களை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்