
சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்கள் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் மாணவர்களின் ஒழுங்கு கட்டுப்பாட்டைபராமரித்து, பள்ளி பொது நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. பாடவேளையில் வகுப்பை புறக்கணித்து பள்ளி வளாகம், மைதானம், பிற இடங்களில் நடமாடும் மாணவர்களை கண்டித்து வகுப்புக்குச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்