
உதகை: உதகை அருகே உள்ள மகாலிங்கேஸ்வரர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தக் கூடாது என்று ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
உதகை அடுத்த தும்மனட்டி அருகே குந்தசப்பை கிராமத்தில் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. அந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 13 கிராம மக்கள் இக்கோயிலில் வழிபட்டு வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தக்கார் நியமனம் செய்யப்பட்டார். உள்ளூர் மக்கள் எதிர்ப்பு காரணமாக தக்கார் பதவி ஏற்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்