
சென்னை: ஊதிய முரண்பாட்டை களையக்கோரி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அரசு முன்வைத்த கூடுதல் கால அவகாசத்தை ஏற்க ஆசிரியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அவர்களின் போராட்டம் 4-வது நாளாக நேற்றும் நீடித்தது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 31.5.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், 1.6.2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய வேறுபாடு உள்ளது. இதை களையக்கோரி செப்டம்பர் 28 முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் குடும்பத்துடன் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்