Tuesday, October 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/04/large/1133251.jpgவிடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளின் அடாவடி வசூல்: அரசு வேடிக்கை பார்ப்பதாக வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள்

சென்னை: அண்மையில் முடிவுற்ற தொடர் விடுமுறை நாட்களில் கடுமையாக உயர்த்தப்பட்ட ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை செலுத்தி பயணித்த பொதுமக்கள், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண அரசு முயற்சிக்குமா என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.

விடுமுறை, விழா நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது தடுக்க முடியாததாக மாறிவிட்டது. இதனால்சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளில் கல்வி, பணி நிமித்தமாக தங்கியிருப்போர் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியே சொந்த ஊர் செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின்றனர். இதில் குடும்பமாக சொந்த ஊர் செல்ல விரும்புவோரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏனெனில், சென்னையில் இருந்து சுமார் 600 கிமீ சென்று திரும்ப 3 உறுப்பினர் உள்ள குடும்பத்தினர் குறைந்தபட்சமாக பேருந்து கட்டணத்துக்காக மட்டும் ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கிறது. குறிப்பாக அண்மையில் முடிவுற்ற விடுமுறை நாட்களில் நாகர்கோவிலில் இருந்து சென்னை திரும்ப ரூ.4,700 கட்டணம் அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், நெல்லைக்கு ரூ.4 ஆயிரம், கோவைக்கு ரூ.5 ஆயிரம் என ரொக்கமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தால், சேமிப்புகளை பயணச்சீட்டுக்காக செலவழிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். இவ்வாறு விமான கட்டணத்துக்கு இணையாக வசூலிக்கப்பட்ட ஆம்னி பேருந்து கட்டணம், பெரும்பாலானோரின் பொருளாதார நிலையை மோசமாக்கியுள்ளதை அவர்களது குமுறல்கள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...