
சென்னை: விவசாயிகளின் உரிமைகளுக்காகவும், நீர் ஆதாரத்துக்கும் பாஜக துணை நிற்கும் என்று சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். காவிரி விவகாரம் தொடர்பான தீர்மானத்தின் மீது அவர் பேசியதாவது.
பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்: கர்நாடகத்தில் கடந்த முறை பாஜக ஆட்சியில் இருந்தபோது, இந்த மாதிரியான சூழல் எதுவும் ஏற்படாத காரணத்தையும் சிந்தித்து பார்க்க வேண்டும். கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி, இங்குள்ள ஆளும் கட்சியோடு கூட்டணியில் இருந்தாலும்கூட, காங்கிரஸ் கட்சியை பற்றியோ, கர்நாடக மாநில அரசை பற்றியோ விமர்சனம் இல்லாமல், மத்திய அரசை வலியுறுத்தி என்ற தோற்றத்தை இந்த தீர்மானம் கொண்டு வருவதாக நாங்கள் நினைக்கிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்