
சென்னை: சட்டப்பேரவை, நீதிமன்றம், நிர்வாகம் ஆகிய 3 பிரிவுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என்று கானா நாட்டில் நடந்த காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தினார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ராவில் 66-வது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டின் கருத்தரங்கு கடந்த 4-ம் தேதி நடந்தது. இதில் தமிழக கிளையின் பிரதிநிதியாக, சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்துகொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்