
காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத்துக்காக 3,774 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட போராட்டக் குழுவினர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து பெண்கள் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்ததால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,476 ஏக்கர் பரப்பில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்