
புதுடெல்லி: மழை, வெள்ளத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் இண்டியா கூட்டணி கூட்டத்தில் இருந்தார். ‘வெள்ளம் காரணமாக என்னால் கூட்டத்துக்கு வரமுடியாது. என் மண், மக்கள் எனக்கு முக்கியம்’ என்று, அந்த கூட்டத்தை தள்ளிவிட்டு அவர் தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அவருக்கும் முன்பாகவே உதவிக்கரம் நீட்டிவிட்டது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் தமிழக செய்தியாளர்களிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பேசினார். அவர்களது கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அவர் கூறியதாவது: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்வது குறித்த தகவல் எங்களுக்கு 18-ம் தேதி காலையில் கிடைத்தது. இதுபற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் உடனே தெரிவித்தேன். விரைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எஃப்), ராணுவம் உள்ளிட்ட துறைகளுக்கு அவர் என் முன்னிலையிலேயே உத்தரவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்