
சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றி வைத்து, முப்படையினர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நாட்டின் 75-வது குடியரசு தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின விழாநடைபெற்றது. முதலில், காலை 7.52 மணிக்கு சென்னை போக்குவரத்து காவலர்களின் புல்லட் அணிவகுப்புடன் முதல்வர் ஸ்டாலின், வாலாஜா சாலை வழியாக விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவரை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். இதைத் தொடர்ந்து, விமானப்படை வீரர்களின் புல்லட் அணிவகுப்புடன் ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். அவரை முதல்வர் வரவேற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்