
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலை ஏற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை வரும் ஜன.19 வரை தள்ளிவைக்க அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், போக்குவரத்துத்துறையின் வரவு மற்றும் செலவுக்கு இடையிலான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்