
கரோனா ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து, சென்னையில் மின்சார ரயில்களில் நேற்று முதல் பொதுமக்களும் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், 630 மின்சார ரயில்களும் முழு அளவில் இயக்கப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டும் பயணிக்கும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களும் நேற்று முதல் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்