
வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சி குறித்த கண்காட்சி 11 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
வேலூர் கோட்டையில் கடந்த 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அதிகாலை நடைபெற்ற சிப்பாய் புரட்சி இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் விதையாக கருதப்படுகிறது. வரும் ஜூலை 10-ம் தேதி சிப்பாய் புரட்சியின் 215-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. அப்போது, சிப்பாய் புரட்சியில் உயிரிழந்த 300-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மக்கான் பகுதியில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்