
சிவகங்கை மாவட்டம், திருப் புவனம் அருகே கீழடி அகழ் வைப் பகம் அமைக்கும் பணி தாமதமாக நடந்து வருகிறது. ஓராண்டாகியும் கட்டிடத்தின் அடித்தளம் கூட முழுமை அடையவில்லை.
திருப்புவனம் அருகே கீழடியில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு அமைந்துள்ளது. இங்கு 2014 முதல் அகழாய்வு நடந்து வருகி றது. ஏற்கெனவே மூன்று கட்ட அகழாய்வு மத்திய தொல்லியல் துறை மூலமாகவும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கட்ட அகழாய்வு தமிழக தொல்லியல் துறை மூல மும் நடந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்